1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 2 பேர் கைது

பெரம்பூர்: வேனில் கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.சென்னை கொடுங்கையூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையில், எஸ்ஐ ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் சந்திப்பு பகுதியில் கண்காணித்தபோது சந்தேகப்படும்படி நின்றிருந்த மினி வேனில் சோதனை செய்தபோது 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து வண்டியை ஓட்டி வந்த மணலி கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த சூர்யா (20), வியாசர்பாடி பிவி.காலனி பகுதியை சேர்ந்த ஆனந்த் (21) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: