காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சென்னையில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் நேற்று காலை சென்னையில் பாஸ்கர்ராமன் கைது செய்யப்பட்டார். வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 260-க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்கள் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்தநிலையில், சென்னையில் கைது செய்யப்பட்ட ஆடிட்டர் பாஸ்கர்ராமனை டெல்லி அழைத்து செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், ஆடிட்டர் பாஸ்கர்ராமனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: