துரைப்பாக்கம்: சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி திமுக சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவான்மியூர் வடக்கு மாடவீதியில் நடந்தது. பகுதி செயலாளர் துரை கபிலன் தலைமை தாங்கினார். இதில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், சிங்கை சௌந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் சென்னை துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, தலைமை சட்ட திருத்த குழு செயலாளர் பாலவாக்கம் சோமு, மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், மண்டல குழு தலைவர்கள் இரா.துரைராஜ், எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.இ.மதியழகன், கவுன்சிலர்கள் வேளச்சேரி மணிமாறன், க.தனசேகர், எம்.கிருஷ்ணமூர்த்தி, கே.கண்ணன், மு.ராசா, மாவட்ட தலைவர் எஸ்.குணசேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளர் வாசுகி பாண்டியன், வட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.விநாயகமூர்த்தி, 179வது வார்டு கவுன்சிலர் கயல்விழி ஜெயக்குமார், சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி திருவான்மியூர் டி.பாலாஜி, ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் அடையாறு சி.சுரேஷ், வேளச்சேரி கிழக்கு பகுதி வட்ட செயலாளர்கள் க.கணேஷ்குமார், ராஜாரமணன், எஸ்.ஜெயக்குமார், ஆ.பாண்டியன், பெ.ராஜி, மு.தனசேகர், வழக்கறிஞர்கள் சந்தானம், தமிழரசு, எம்.விநாயகமூர்த்தி, ஆர்.பாலசுந்தரம், சி.பரிமேலழகன், அடையாறு பாஸ்கர், அருணா, வேலாயுதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.