சென்னை : தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. சில மாவட்ட பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் ஆசிரியர்கள் இடம் மாற்றப்பட்டனர். இதன்படி, 3,000 ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர்.