சென்னை: கிண்டி கொரோனா மருத்துவமனை, 60 வயதை கடந்த முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்தில் முதியோருக்கான சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும். கொரோனா நோயாளிகள் இல்லாததால் முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.