சேலம்: சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவடி பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.