கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் நாட்டார் பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (51). இவர் அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று காலை மேல்மாயிலில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ வாங்கி படிக்கட்டில் அமர்ந்து குடித்துள்ளார். பின்னர், அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்து எழுந்து நின்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி வெங்கடேசன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து குடும்பத்தினர் வந்து கதறி அழுதனர். வெங்கடேசனுக்கு கல்லூரி படிப்பை முடித்த நிவேதா(22) என்ற மகளும், கே.வி.குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் நிகிலா(15) என்ற மகளும் உள்ளனர். இருவரும் தந்ைதயின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.இந்த நிலையிலும், 2வது மகள் நிகிலா தனது மனதை தேற்றிக்கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். \”நன்றாக படிக்க வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்’’ என்று அவர் கூறினார்.