ஆவடி: ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோராசேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சிபிஅரசன் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கோணம்பேடு, சோழசேரி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர் கோணம்பேடு பள்ளியை சேர்ந்த மாணவியை சோழசேரி மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதை மாணவி சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.