இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை

சென்னை: இலங்கை சிறையில் இருந்து 4 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச்சேர்ந்த வேலாயுதம், சதீஷ், ராஜகனி, விசாகர். இந்த 4 மீனவர்களும் மார்ச் மாதம் இந்திய எல்லையில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் இருக்கும் 4 தமிழக மீனவர்களை மீட்டு தரும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மீனவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வலியுறுத்தினார். இந்நிலையில், கடந்த மாதம் 4 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், 4 தமிழக மீனவர்களும் கொழும்பு நகரிலிருந்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஏர்இந்தியா விமானத்தில் சென்னைக்கு வந்தனர்.

Related Stories: