சென்னை: சென்னை தியாகராஜ நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று நிருபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாய் அற்புதம் அம்மாள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, அவரது கண்ணீர் வீண் போகவில்லை. அவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.