திருமங்கலம்: திருமங்கலம் கவுண்டமாநதியில் மூன்றாம் கட்ட தூர்வாரும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.மதுரை மாவட்டம், எழுமலை அருகே மேற்குத்தொர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி சௌடார்பட்டி, அரசபட்டி, குராயூர் வழியாக காரியாபட்டி அருகே குண்டாற்றில் இணைகிறது கவுண்டமாநதி. இந்த நதி நீர் மூலம் உசிலம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வந்தனர். ஆனால் தொடர்ஆக்கிரமைப்புகளால் கவுண்டமாநதி தனது பொழிவை இழந்து காட்சியளித்தது. இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் கவுண்டமாநதியை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கின. இதையொட்டி முதற்கட்டமாக திருமங்கலம் சௌடார்பட்டி - திரளி வரையில் நதியை தூர்வாரும் பணிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டது. தொடர்ந்து கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரசபட்டி - குராயூர் இடையே 6 கி.மீ தூரம் ரூ.3 கோடியில் தூர்வாரப்பட்டது.