கும்பகோணம்: சென்னை பூந்தமல்லி அருகே பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் சிவலிங்கம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் டிஎஸ்பி கதிரவன் உள்ளிட்ட தனிப்படையினர் விரைந்தனர். கடத்தல்காரர்களிடம் சிலை வாங்க செல்லும் வியாபாரிகளை போல அணுகினர். சிவலிங்கத்தின் விலை ரூ.25 கோடி என கடத்தல்காரர்கள் கூறினர். இதையடுத்து, அவர்கள் சிலையை காண்பித்தவுடன், சென்னை வெள்ளவேடு புது காலனியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா (46) மற்றும் சென்னை புதுச்சத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (42) ஆகியோரிடம் இருந்து பச்சைக்கல் லிங்கத்துடன் கூடிய நாகாபரணம் சிலையை பறிமுதல் செய்து கைது செய்தனர்.