×

நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் வெட்டினார் கேக்... சிக்கினார் வாலிபர்: போலீசை ஏமாற்ற ஹேர் ஸ்டைலை மாற்றினார்

அண்ணாநகர்: நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தலைமுடியை மாற்றி வெட்டிக்கொண்டு சுற்றியது தெரியவந்துள்ளது. சென்னையில் ஒரு வாலிபர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் பிறந்தநாள் கொண்டாடியது சமூகவலைதளத்தில் பரவியது. இதை பார்த்த போலீஸ் உயரதிகாரிகள், அந்த வீடியோ வெளியிட்ட நபர்களை பற்றி விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து திருமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ சென்னை பழைய திருமங்கலம் பகுதியில் இருந்து வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் வரதராஜன், ஆய்வாளர் சிபுகுமார் தலைமையில் போலீசார் அந்த நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் தனது தலைமுடியை வித்தியாசமாக வெட்டிக்கொண்டு உலாவி வந்துள்ளார். அப்படியிருந்தும் போலீசார், சென்னை பழைய திருமங்கலம் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று விசாரித்து அங்கிருந்த ஆனஸ்ட்ராஜ்(23) என்பவரை கைது செய்தனர். சென்னையில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் 2 வாரத்துக்கு முன்பு பி.பி.ஏ முடித்துவிட்டு உணவு டெலிவரிபாய் வேலை செய்து வருகிறார் என்று தெரிந்தது.

ஆனஸ்ட்ராஜ், கடந்த 15ம் தேதி நண்பர்களுடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அவற்றை சமூகவலைதள பக்கத்தில் நண்பர்கள் மூலம் பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.  இதையடுத்து அவரிடம் இருந்து பட்டாகத்தியை பறிமுதல் செய்து பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Walipur , With friends, with a knife, cut, cake
× RELATED ஏடிஎம் மையம் உடைப்பு: ஒடிசா வாலிபர் சுற்றி வளைப்பு