திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகரில் உள்ள குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே குப்பை பிரித்து உரம் தயாரிக்கும் பணியும் அதன் அருகிலேயே எரிவாயு தகன மேடை ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் நகராட்சி குப்பை கிடங்குக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி நகர்மன்றதலைவர் கவிதா பாண்டியன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர் மேலும் நகராட்சியில் உள்ள மூன்று தண்ணீர் டேங்கர் லாரி மூலமும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது.