நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் கோரையாற்றில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணி 3 ஆண்டுகளாகியும் நிறைவடையவில்லை. விரைந்து முடிக்கப்படும என மக்கள்எதிர் பார்ப்பில் உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அடிக்கடி போடப்படும் ரயில்வே கேட்டால் அதிக போக்கு வரத்து நெறிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால் வெளி மாநிலம்,மாவட்டம் மற்றும் அருகில் உள்ளவர்கள் நவகிரக கோயில்கள்,சுற்றுலா தலங்களுக்கு நீடாமங்கலம் வழியாக செல்லும் போது நெரிசலில் மாட்டி செல்லும் இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனையறிந்த கடந்த அதிமுக ஆட்சி நடந்த போது போக்குவரத்து நெரிசலை ஓரளவு கட்டுப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை தட்டித்தெரு விலிருந்து நீடாமங்கலத்திலிருந்து ரிஷியூர் செல்லும் சாலை கொத்தமங்கலத்தை இணைத்து கோரையாற்றில் இணைப்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.