சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் நாளை காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். வெள்ளைத்துணியால் வாயை கட்டிக் கொண்டு நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை போராட்டம் நடத்தப்படும். காங்கிரஸ் கட்சியினர் முக்கிய இடங்களில் நின்று அறப்போராட்டம் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.