தொட்டியம்: தொட்டியம் அருகே உள்ள மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (46) கூலி தொழிலாளி. இவர் அழகரை ஊராட்சி உட்பட்ட கோடியாம்பாளையம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பீயூஸ் போனதை சரி செய்வதற்காக மின் கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது வீரப்பனை மின்சாரம் தாக்கியது. இதில் கம்பத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அய்யம்பாளையம் மின்வாரிய அலுவலர் சோமசுந்தரம் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.