பொன்னமராவதி: புதுக்கோட்டை அருகே கணவருடன் தகராறில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தாய் நேற்று கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பர்கோவில்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் பொன்னடைக்கன்(28). பொள்ளாச்சியில் தேங்காய் மண்டியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பஞ்சவர்ணம்(21). இவர்களுக்கு ஜெகதீசன்(2) என்ற மகனும், தக்ஷியா (8மாதம்) என்ற மகளும் இருந்தனர். பொன்னடைக்கன் குடிப்பழக்கம் காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் திருவிழாவுக்காக அவர் சொந்த ஊர் வந்து இருந்தார். நேற்றுமுன்தினம் அதே பகுதியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாய் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.