விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையரக கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் சென்னை விமான நிலையத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைத்திருக்கிறோம். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் குண்டு வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். சென்னை விமான நிலையம், விமான நிலைய போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசியில் இது புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீசார் காலர் ஐடியை வைத்துஆய்வு செய்தனர். அதில் திருநெல்வேலியை சேர்ந்த மனநலம் பாதித்த வாலிபர் பேசியது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக சென்னை அழைத்து வருகின்றனர்.

Related Stories: