பாம்பு கடித்து சிறுமி சாவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஒரகடம் அடுத்த பனையூர் கிராமம், குளக்கரை தெருவை சேர்ந்தவர் நாராயணன். கூலி தொழிலாளி. இவரது 2வது மகள் தீபா (15). பண்ருட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்  9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தீபா வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்தார். அவரது வீட்டில் மின்சார வசதி இல்லை. அந்த நேரத்தில், விஷப்பூச்சி, சிறுமியை கடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார். உடனே பெற்றோர், எழுந்து போர்வையை உதறியபோது, விஷ பாம்பு இருந்ததை கண்டனர். உடனே, சிறுமியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார். புகாரின்படி ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: