திருவள்ளூர்: திருவள்ளூரில் ரயில் மூலம் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து தலைமறைவான கடத்தல்காரர்களை வலைவீசி தேடிவருகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரயில்வே பாதுகாப்பு பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.