கோவை மாவட்டம் சூலூர் அருகே அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் சுவர் இடிந்து தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே அதிமுக நிர்வாகி சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள கட்டிட சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். கோவை சூலூர் பாப்பம்பட்டி - செட்டிபாளையம் சாலையில் அதிமுக நிர்வாகி சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.

அங்கு அஸ்திவாரம் போடாமல் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தில் ஜன்னல் வைக்க சுவர் இடிக்கப்பட்டது. அப்போது திடீரென சுவர் இடிந்து விழ, அங்கு பணியில் இருந்த சிவா, கோபால்சாமி ஆகிய இருவர் மீது சுவர் விழுந்துள்ளது. இதில் வேளாண்குடியை சேர்ந்த தொழிலாளி சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபால்சாமி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: