ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. 20 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் கடல் அலைகள் எழுந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி ,அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சிற்றமாக காணப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடற்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கபட்டுள்ளது.