சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: மே முதல் வாரத்தில் ஒரு கிலோ நூலின் விலை ரூ.441. தற்போது ரூ.481. நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழிலுக்கு ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.