டெல்லி: கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துவது குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு 263 விசாக்களை முறைகேடாக பெற்றதாக சிபிஐ புகார் தெரிவித்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்றதாகவும் சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.