கோபி: ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள அம்மாபேட்டை பி.கே.புதூரை சேர்ந்தவர் முத்து மகன் விஸ்வநாதன் (32). கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கொங்கர்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்த சடையப்பன் மனைவி பாப்பாத்தி என்பவரது வீட்டிற்கு, மின்கம்பத்தில் இருந்து வீடுவரை உள்ள மின்சார வயர்கள் முழுமையாக பழுதடைந்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் டி.என்.பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து, நேற்று கொங்கர்பாளையம் பகுதி மின்வாரிய வயர்மேன் சக்திவேல் (43), ஒப்பந்த ஊழியர் விசுவநாதனை அழைத்து கொண்டு பாப்பாத்தி வீட்டிற்கு வந்தார். டிரான்ஸ்பார்மரில் மின்இணைப்பை துண்டித்துவிட்டு கம்பத்தில் இருந்து வீடு வரை உள்ள வயரை மாற்றினர்.