புதுகையில் கஞ்சா விற்ற எஸ்ஐ மகன் உள்பட 5 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்குட்பட்ட குன்னவயல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில், அந்த பகுதியில் நேற்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், இலுப்பூர் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் பிரிதிவிராஜ் (26), அவரது நண்பர்கள் மதி (33), கியோபோஸ் (23), திண்டுக்கல்லை சேர்ந்த ஜோஸ்வா (19), மணப்பாறை கே.உடையார்பட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன் என தெரிய வந்தது.

போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.100 கிராம் கஞ்சா, 3 செல்போன், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான கியோபோஸ், தூத்துக்குடி தெற்கு காவல்நிலைய எஸ்எஸ்ஐ மகன் என்பதும், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து கொண்டே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: