ஆம்பூர்: ஆம்பூர் அருகே நாய்க்கனேரி மலைகிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் காட்டாற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் நாசமானது. ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மதியம் முதல் சில்லென்று காற்று வீசியது. இதை தொடர்ந்து நேற்று மாலை கனமழை பெய்தது. ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி மலைகிராமத்தில் பெய்த கனமழையால் காட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மழைவெள்ளம் கரை புரண்டு ஒடியதில் அருகில் கம்பிகொல்லையில் இருந்த ஆனைமுகன் மடுகு தடுப்பணை நிரம்பியது.