செங்கல்பட்டு: சென்னை அடுத்த பையனூரில் சாய் பல்கலைக்கழக கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் கவுரவ விருந்தினராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார். திறப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. உயர்க்கல்வியில் கவனம் செலுத்துவதன் காரணமாகத்தான் அன்று கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுடன் அதற்கு உச்சநீதிமன்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் கலைஞர்.