சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சார ரயிலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார். மறைமலை நகரை சேர்ந்த ஜெசரன்துரை சக மாணவர்களுடன் படிக்கட்டில் பயணித்து கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்தார். தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.