லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலியானார். திருவள்ளூர், மேல்நல்லாத்தூரில் நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை கண்ட லாரி டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இறந்த நபர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து மேல்நல்லாத்தூர் வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: