தமிழகத்தில் நேற்று 31 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 13,149 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 31 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 332 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 58 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,16,295 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 38,025 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று அதிகபட்சமாக சென்னையில் 16 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேர், காஞ்சிபுரம் 3 பேர், கிருஷ்ணகிரி 2 பேர், கோவை, திண்டுக்கல், திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 31 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: