துரைப்பாக்கம்: திருவான்மியூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (48). இவரது மனைவி சுகுணா (41). தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். வாடகை வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு, ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ரூபன் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகி உள்ளார். இவர், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குறைந்த விலைக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக, சுந்தர்ராஜனிடம் கூறியுள்ளார். இதற்காக, சுந்தர்ராஜன் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் நகையை அடமானம் வைத்து ரூ.15 லட்சத்தை ரூபனிடம் கொடுத்துள்ளனர். ஆனால், பல மாதங்களாகியும் வீட்டு மனை வாங்கி தராமல் ஏமாற்றி உள்ளார். எனவே, பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனாலும், பணத்தை திருப்பி தரவில்லை. இதனால், போலீசில் புகார் அளிக்கப்போவதாக சுகுணா கூறியுள்ளார்.