கந்துவட்டி கொடுமையால் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

திருவொற்றியூர்: மணலி சர்.சி.வி.ராமன் தெருவை சேர்ந்தவர்  அனந்தராமன், கொத்தனார். இவரது மனைவி தேவி (50). அனந்தராமனுக்கு போதிய வருமானம் இல்லாததால் தேவி குடும்பம் நடத்த சிரமப்பட்டார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். அதற்கு வட்டியும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர் அசல் தொகையுடன் கூடுதல் வட்டி கேட்டு தேவியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேவி, நேற்று மாலை மணலி  காவல் நிலையத்திற்கு வந்தார். பின்னர் கந்து வட்டி கொடுமை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் கொடுத்து விட்டு கீழே வந்த தேவி, கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனடியாக ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: