கும்பகோணம்: கும்பகோணம் புறவழிச்சாலையில் சாலை விரிவாக்கப்பணிகளை நேற்று ஆய்வு செய்த பின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: தஞ்சை மாவட்டத்தில் 2,716 கி.மீ. சாலையில் கட்டுமானம், விரிவாக்கம், தரம் உயர்த்துதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று அரசு செயல்பட்டு வருகிறது. கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். தஞ்சை-கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை மிக மோசமாக பழுதடைந்துள்ளதால் ரூ.65 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.