மதுரை: மதுரையில் தனியார் நிறுவன காவலாளி கொல்லப்பட்ட நிலையில் , தொடர்கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற 63 வயது முதியவர். மதுரை மேலைக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பேருந்து நிறுத்தும் இடத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை அந்நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது முருகேசன் சடலமாக கிடந்துள்ளார்.