அமெரிக்காவில் தேவாலயம், சூப்பர் மார்க்கெட் என 2 இடங்களில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் பலி; 8 பேர் காயம்!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான அதிர்ச்சி அடங்குவதற்குள் மேலும் 2 வேறு நகர்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் பரபரப்பு அதிகரித்துள்ளது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 80 கிமீ தொலைவில் உள்ளது லாகூனா வுட்ஸ் என்ற நகரம். பெரும்பாலும் 55 வயதிற்கு மேற்பட்டவர்களும் ஓய்வுபெற்றவர்களுமே இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்காக நிர்வகிக்கப்பட்டுள்ள தேவலாயம் ஒன்றில் உணவு விருந்து நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, மர்ம நபர் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை அங்குள்ளவர்கள் பிடித்து கட்டிவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதே போன்று ஹூஸ்டனில் மார்க்கெட் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 3 பேர் காயம் அடைந்தனர். ஏற்கனவே அறிமுகம் ஆனவர்களுக்குள் திடீரென ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஹூஸ்டன் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை. மொத்தத்தில் அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: