தஞ்சாவூர்: திருமண விழாவில் பேசிய சசிகலா, குரங்கு கதையை சொல்லி டிடிவி தினகரனை மறைமுகமாக தாக்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா, அஇஅதிமுகவை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமைகொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் உகுந்த நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார். கொடிபிடிக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் நம்மோடு இருக்கும் சூழலில் கழகம் மீண்டும் மிடுக்கோடும், செறுக்கோடும் தலைநிமிரும்.