குரங்கின் அவசர புத்தி!: திருமண விழாவில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி மறைமுகமாக டிடிவி தினகரனை தாக்கிய சசிகலா?

தஞ்சாவூர்: திருமண விழாவில் பேசிய சசிகலா, குரங்கு கதையை சொல்லி டிடிவி தினகரனை மறைமுகமாக தாக்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா, அஇஅதிமுகவை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமைகொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் உகுந்த நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார். கொடிபிடிக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் நம்மோடு இருக்கும் சூழலில் கழகம் மீண்டும் மிடுக்கோடும், செறுக்கோடும் தலைநிமிரும்.

இந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன் என்று குறிப்பிட்டார். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறிய அவர், குரங்கு கதையை கூறி தினகரனை மறைமுகமாக சாடினார். அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் அவசர புத்தியை மனதில் வைத்து சசிகலா இந்த குட்டி கதையை சொன்னதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: