மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 25 பேருக்கு வீடு கட்ட ஒதுக்கீடு ஆணை: எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்

பொன்னேரி:  மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், 25 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு ஆணைகளை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், 25 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, பேரூராட்சி வளாகத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெற்றி அரசு முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் அலெக்சாண்டர் வரவேற்றார். பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 25 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் பரிமளா அருண்குமார், துரைவேல் பாண்டியன், அபுபக்கர், ரஜினி, நக்கீரன், ஜெயலட்சுமி, குமாரி, கவிதா, சங்கீதா, மோனிகா, ஜெயலட்சுமி, தலைமை எழுத்தர் அன்பரசு, சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: