மாமல்லபுரம்: இனப்பெருக்கம் காலத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால், பாம்புகள் பாதுகாக்கப்பட்ட பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரம், அடுத்த வடநெம்மேலி கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையொட்டி தமிழக அரசின் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. பாம்பு பிடிப்போர், கூட்டுறவு சங்கத்தில் உள்ள 350க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் தமிழக அரசிடம் அனுமதி சான்று பெற்று, ஆண்டுதோறும் பாம்பு பிடித்து இப்பண்ணைக்கு வழங்கி வருகின்றனர்.