மும்பை:ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 62வது லீக் போட்டி குஜராத்-சென்னை அணிகள் மோதுகின்றன.சென்னை இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. பிளே ஆப் வாய்ப்பை இழந்த சென்னை எஞ்சிய 2 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வென்று புள்ளி பட்டியலில் முன்னேறிச் செல்ல முயற்சிக்கும். அறிமுக அணியான குஜராத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுவிட்டது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்றும் சென்னையை வீழ்த்தும் நோக்கில் அந்த அணி களம் இறங்குகிறது.