×

மாஸ்க் அணிந்திடு... வைரஸை அழித்திடு...

நன்றி குங்குமம் தோழி

கடந்த ஐந்து மாத காலமாக உலகம் முழுதும் மக்களை பெரிய இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது, கொரோனா புயல். மக்களால் நிம்மதியாக வெளியே செல்ல முடியவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. வெளியே செல்லும் போது முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை சானிடைசரால் கழுவ வேண்டும். எந்த பொருளை தொட்டாலும் கைகளை சோப்பால் 20 வினாடிகள் கழுவ வேண்டும்... இப்படி பல கட்டுப்பாடுகளுடன் தான் இன்றைய சூழலை கடந்து வருகிறோம். அந்தந்த சூழலுக்கு ஏற்ப நாமும் மாற கற்றுக் கொள்ளணும் என்கிறார் மதுரவாயிலை சேர்ந்த செந்தில்குமார்.

‘‘இப்போது மாஸ்க் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. காரணம் இந்த தொற்று, காற்று மூலம் பரவும் என்பதால், நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியம். மாஸ்கில் பல வகை உள்ளது. மருத்துவர்கள் பயன்படுத்துவது கிளிக்கல் மற்றும் என் 95 மாஸ்க். இவை தாண்டி பலர் உடைகளுக்கு ஏற்ப மேட்சிங் மாஸ்க்குகளை சாதாரண துணியில் வடிவமைத்து தருகிறார்கள்.

இவை எவ்வளவு தூரம் தொற்றை கட்டுப்படுத்தும் என்று சொல்ல முடியாது. அந்த வகையில் நாங்க ஸ்விஸ் நிறுவனமான ஹெக்யூவுடன் இணைந்து தொற்றை கட்டுப்படுத்தவும் அதே சமயம் எல்லாரும் அணியக் கூடிய வகையில் பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களின் மாஸ்குகளை அறிமுகம் செய்து இருக்கிறோம். 99.9% சதவிகிதம் தொற்று நம்மை தாக்காமல் இருக்கக் கூடிய தொழில்நுட்பத்தை இந்த மாஸ்கில் உபயோகப்படுத்தி இருப்பதால் முற்றிலும் பாதுகாப்பானவை’’ என்று கூறும் செந்தில் கடந்த 20 வருடமாக ஜவுளி துறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆடைகளை  வடிவமைத்து வருகிறார்.

‘‘நாங்க ஸ்விஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிங்கில் ஃப்ரீ மற்றும் நேனோடெக்னாலஜி உடைகளை தயாரித்து வருகிறோம். அதன் அடிப்படையில் தற்போது எல்லாருக்கும் பயன்படக்கூடிய பாதுகாப்பு கவசமான டிபெண்ட் மற்றும் புரோடெக்ட் மாஸ்கினை அறிமுகம் செய்து இருக்கிறோம். இந்த மாஸ்க் 80% பாலியஸ்டர் மற்றும் 20% ஸ்பாண்டெக்ஸ் துணிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் நான்கு லேயர்கள் உள்ளன. ஒவ்ெவாரு லேயரும் கிருமிகள் உள்ளே வராமல் பாதுகாக்க உதவுகிறது. முதல் லேயரான ஹெக்யூ வைரோப்ளாக், ஆன்டி வைரலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இது முற்றிலும் வைரஸ் கிருமிகளை அழிக்க உதவுகிறது.

இதில் உள்ள ரசாயனம் மாஸ்கின் வெளியே வைரஸ் கிருமி தங்கினால், அதனை சில நிமிடங்களில் முற்றிலுமாக அழித்துவிடும். அதாவது, உங்களுக்கு எதிரில் தொற்றுள்ளவர்கள் இருமும் போது, அந்த வைரஸ் கிருமி நமக்கு பரவ வாய்ப்புள்ளது. அந்த தருணத்தில் நீங்க இந்த மாஸ்க்கினை அணிந்திருந்தால், வைரஸ் கிருமி மாஸ்க்கின் வெளிப்பகுதியில் தங்கிடும்.

அவை நம் நாசிக்குள் செல்வதற்கு முன்பே மாஸ்கில் உள்ள ரசாயனம் அதை முற்றிலுமாக அழித்திடும். இரண்டாவது லேயர் ஹெக்யூ ப்யூர். இது மாஸ்க் அணிந்திருப்பதால் வியர்வை மற்றும் எச்சில்  காரணமாக ஏற்படும் கெட்ட வாடையை கட்டுப்படுத்த பயன்படும். மூன்றாவது லேயர் ஹெக்யூ ஸ்மார்ட் டெம்ப். நாம் வெளியேற்றும் சூடான காற்றினை குளுமைப்படுத்தும்.

மேலும் தொற்றுள்ளவர்கள் இந்த மாஸ்கினை அணியும் போது, அவர்கள் மூலமாக தொற்று வெளியேறாமல் பாதுகாக்கவும் உதவும். நான்காவது ஹெக்யூ ஈகோ டிரை. மாஸ்க் அணியும் பகுதியில் வியர்வை துளிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு துளிகள் முகத்தில் தங்காமல், அதனை உறிந்து எப்போதும் டிரையாக வைக்க உதவும். இது போன்ற பல வித பாதுகாப்பு கவசம் கொண்ட மாஸ்குகள் மார்க்கெட்டில் இல்லை’’ என்று அடித்து சொல்கிறார் செந்தில்குமார்.

பல நிறங்கள் மற்றும் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த மாஸ்குகளை 30 தடவை வரை துவைத்து பயன்படுத்தலாம். பல ஆய்வுகளுக்கு பிறகே இதனை அறிமுகம் செய்து இருப்பதால், தொற்று பரவாமல் இருக்க இந்த மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாஸ்க்கினை டிஃபெண்ட் மற்றும் புரொடெக்ட் நிறுவன இணையத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனங்களுக்கு மொத்த விற்பனையும் செய்து வருகிறோம். இந்தியா மட்டுமல்ல உலகில் எங்கு வேண்டும் என்றாலும், இணையத்தில் ஆர்டர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தற்போது வணிகரீதியாக விற்பனை செய்வதற்கான முயற்சியும் செய்து வருகிறோம்’’ என்ற செந்தில்குமார் ஆண்கள் குறிப்பாக தாடி வைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காகவே பிரத்யேக மாஸ்க்கினை தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக  தெரிவித்தார்.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!