திருவண்ணாமலை: ஆரணியில் 7 ஸ்டார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உணவகத்தில் சாப்பிட்ட கெட்டுப்போன சில்லி சிக்கன், தரமற்ற தண்ணீரே 30 பேரின் உடல்நல பாதிப்புக்கு காரணம் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது. உணவகம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு திருவண்ணாமலை எஸ்.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.