சென்னை, ஜன. 29: காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி மாநில தலைவர் முனுசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராயபுரத்தில் வசித்து வரும் எம்.பன்னீர்செல்வம் என்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவர் ஐஎன்டியுசி துணை தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் சங்கத்தின் பதவியை பயன்படுத்தி நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதால் அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.