நடிகர் விஜய்யின் கார் விவகாரம் அதிக அபராதம் விதித்ததை எதிர்த்து வழக்கு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு  அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த  வழக்கில் எந்த  ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வணிக வரித்துறைக்கு சென்னை உயர்  நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஜய் சென்னை  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2005ம் ஆண்டு  அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிம்டபிள்யூ எக்‌ஸ் 5 என்ற  சொகுசு காருக்கு  நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400 சதவீத  அளவிற்கு  வணிகவரித் துறை அபராதம்  விதித்துள்ளது. ஏற்கனவே நுழைவு வரி  தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டது. நுழைவு  வரி செலுத்திய நிலையில் அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு  தொடரப்பட்டுள்ளது.

எனவே, அபராதம் விதிப்பது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதி, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். இதேபோல்  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையாறு கேட் ஓட்டல் நிறுவனம்  தாக்கல் செய்துள்ள வழக்கோடு இந்த வழக்கையும் சேர்க்க உத்தரவிடுகிறேன். இந்த   மனு மீதான விசாரணை முடியும்வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய  நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை  வணிக வரித்துறை உறுதி செய்ய  வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: