அர்ச்சகர் வீட்டில் நகை கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் பாக்குபேட்டை கிராமம் ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் கிரண்குமார்(32). அதே பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அர்ச்சகர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கோயிலுக்குச் சென்று பூஜைகள் முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் மாலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், கம்மல், செயின் என 2 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ₹3500 ரொக்கம் என மொத்தம் ₹1.50 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது. புகாரின்படி மணவாளநகர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Related Stories: