திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் பாக்குபேட்டை கிராமம் ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் கிரண்குமார்(32). அதே பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அர்ச்சகர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கோயிலுக்குச் சென்று பூஜைகள் முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் மாலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.