கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், சிறப்பு ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் இந்திரஜித் தலைமையில் நடந்தது. இதில், மகாலட்சுமி நகர் செல்லும் பிரதான சாலையோரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக 45 அடி உயரம் கொண்ட சங்க கொடியை 3 இடங்களில் நிர்வாகிகள் முன்னிலையில் மாநில தலைவர் விக்கிரமராஜா ஏற்றி வைத்தார்.