சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.  தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,591 ஆக இருந்தது. சென்னை மாநகர காவல் துறை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு சற்று காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சங்கர் ஜிவால் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டார். தனிமையில் இருந்தாலும் அலுவலக பணியை அவர் வீட்டில் இருந்தே கவனித்து வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கமிஷனர் அலுவலகத்தில் அவருடன் தொடர்பில் இருந்த உயர் காவல் துறை அதிகாரிகள், கார் ஓட்டுனர், உதவியாளர் உட்பட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

Related Stories: