குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில், அதிமுக - 6, திமுக - 3, தேமுதிக - 1, மதிமுக - 1, சுயேச்சை - 2 என 13 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி இருந்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரபட்டது. இதையடுத்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிமுக யூனியன் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும் கூட்டம் பழநி ஆர்டிஓ சிவக்குமார் தலைமையில் நேற்று காலை 11 மணி அளவில் நடந்தது. இதில், 11 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.