மின்சார ரயிலில் செல்ல தடுப்பூசி சான்று தேவையில்லை

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவித்து கடந்த 27ம் தேதி தமிழக அரசு ஆணையிட்டது. அதனைத் தொடர்ந்து புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளிலும் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் இல்லை. இந்த புதிய நடைமுறை பிப்.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பொதுமக்கள், ரயில் நிலையங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: